மும்பை: இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான 4வது ஒரு நாள் போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி நடைபெறவிருந்த நாளில்தான் ஜிம்பாப்வே நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் நடைபெறவிருந்த 4வது ஒரு நாள் போட்டியை ஒரு நாள் தள்ளி வைத்து ஜூலை 31ம் தேதிக்குப் பதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பதில் மாற்றியுள்ளனர்.
இப்போட்டி புலவேயா க்வீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.