கராச்சி: அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாகித் அப்ரிதி நியமிக்கப்பட இருக்கிறார்.சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வியடைந்தது. கேப்டன் யூனுஸ் கான் முக்கிய சமயத்தில் கைக்கு வந்த எளிய கேட்சை கோட்டை விட்டார். இதையடுத்து அப்போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து கேப்டன் யூனுஸ் கான் நீக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது. பின்னர் அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்தது. அதே நேரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை. நான் பதவி விலகவும் தயார் என அவர் தெரிவித்தார்.இந்நிலையில் அடுத்த மாதம் 3ம் தேதி துபாயில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 அணிகளின் கேப்டனாக அப்ரிதி நியமிக்கப்பட இருக்கிறார்.யூனுஸ் கானுக்கு கையில் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது வலி நிவாரண மருந்துகள் எடுத்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றதகாவும் கூறப்படுகிறது.அவருக்கு சுமார் 15 வாரங்கள் ஓய்வு தேவை என்பதால் அவர் இத்தொடரிலிருந்து நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது.