
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம், டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
அமீத் ஷா சஸ்பென்ட்
குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்திருக்கும் வீரர் அமித்சிங்கும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சஸ்பென்ட் செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அமீத் ஷாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பல புக்கிகளும் சிக்கியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது.