
1995களில் காலந்து கோல்கீப்பராக இருந்தவர் சன்சல் பட்டாச்சார்யா. இவர்தான் டோணியை கிரிக்கெட் விக்கெட் கீப்பராக மாற்றியவர். அண்மைக்காலமாக டோணி மீது வைக்கப்படுகிற விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சன்சல் பட்டாச்சார்யா, விமர்சனம் என்பது வரவேற்கத்தக்கது; ஆனால் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். டோணி மீதான விமர்சனங்கள் கவலை தருகின்றன.
இந்தியாவுக்கு அனைத்து கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார் டோணி. உலகக் கோப்பை ஒருநாள், டி20, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் என அனைத்து சிறப்பையும் பெற்றுக் கொடுத்தவர் டோணி. டோணியை விமர்சிப்பது என்பது ரன் மெஷின் என்று கூறப்படும் சச்சின் டெண்டுல்கரின் திறமையைக் கேள்வி கேட்பதற்கு சமம் என்றார் அவர்.