மும்பை: இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் 15 வீரர்களுக்கும் தலா ரூ1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. மேலும் அணியின் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியதன் மூலம் ரூ2 மில்லியன் டாலர் தொகையை ( ரூ12 கோடி) பரிசாக இந்தியா பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.