டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் குறித்த கேள்விகளைத் தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி பிரதமர் மன்மோகன் சிங் மாதிரி நடந்து கொள்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாஸ்ஸன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்திக்காமல் தவிர்த்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி ஒரு வழியாக செய்தியாளரdகளை மும்பையில் வைத்து சந்தித்தார். அப்போது அவரிடம் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவரோ அந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்துவிட்டு வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு இந்திய அணி தயாராவது பற்றிய கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார்.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாஸ்ஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஸ்கிப்பர் ஏதாவது சொல்லியிருக்கலாம். அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் மன்மோகன் மாதிரி நடந்து கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.