ராஞ்சி: ராஞ்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணி தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.கிரிக்கெட் போட்டிகளில் சிக்சரும், பவுண்டரியுமாக அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தரும் கேப்டன் டோணி ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேர்ந்திருக்கும் அவருக்கு வருகை பதிவேட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டோணி சமீபத்தில் நடந்த தனது கல்லூரி வாழ்க்கையின் முதல் செமஸ்டர் தேர்வை எழுத தவறினார். இதையடுத்து தற்போது வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் அவர் தேர்ச்சியடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. #13;