சென்னை: இந்தியாவில் சிறந்த பைக் ரேஸ் வீரர்களை உருவாக்க வகையில், சென்னை மற்றும் கோவையில் பைக் ரேஸ் பள்ளிகளை துவங்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. கிரிக்கெட் போட்டிகளில் தேவைக்கு ஏற்ப ஆடும் திறன் கொண்ட இவர், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். அணியை சிறப்பாக வழி நடத்தும் திறமை கொண்ட இவர், கடந்த ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பை கிடைக்க உதவினார்.

இந்த அணிக்காக தற்போது ரேஸ்சிங் பள்ளி ஒன்றை துவங்க டோணி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை மற்றும் கோவையில் பைக் ரேஸ் நடத்த தேவையான ஓடுதளம் உள்ளதால், அங்கேயே பைக் ரேஸ் பள்ளியை துவங்க, டோணி திடடமிட்டுள்ளார்.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச பைக் ரேஸ் போட்டியில், டோணியின் அணியை களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது அணியின் பெயரை மாஹி பைக் ரேஸ் அணி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். பள்ளியின் திறப்பு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.