பழிவாங்குமா இந்தியா-நாளை இலங்கையுடன் பைனலில் மோதல்?
கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனல் இன்று நடக்கிறது. கடைசி லீக் போட்டியில் 139 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி பைனலில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்திய கேப்டன் டோணி கூறுகையில்,
இது ஒரு மோசமான தோல்வி. மோசமான நாள். துவக்கத்தில் இருந்து எதுவும் கைகூடவில்லை. டாஸை இழந்தோம். அவர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்துவிட்டது. டாஸ் வென்றால் போட்டியை 60 சதவீதம் வென்றுவிட்டதாக முடிவு செய்துவிடலாம்.
இலங்கை பேட்ஸ்மேன்களும், மேத்திவ்ஸ்ம் சிறப்பாக செயல்பட்டனர்.
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய மறுநாள் இலங்கையுடன் மோதினோம். அட்டவணை வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது.
இன்று நடக்கும் பைனலில் நிச்சயம் இலங்கை அணிக்கு சவால் கொடுப்போம் என்றார்.
இதையடுத்து இந்திய அணி இன்று நடக்கும் பைனலில் கோப்பை வென்று, இலங்கையை பழிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications