2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவிப்பு

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் வரும் 8ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கிறது.
இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டம், தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் 7 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 'இந்திய சுவர்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2007 அக்டோபரில் ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டிராவிட் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
அதே போல் கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் பங்கேற்காத சச்சின், ரெய்னா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக டோணியும், துணை கேப்டனாக யுவராஜூம் தேர்வு செய்யப்பட்டு்ள்ளனர்.
ஷேவாக் இல்லை...
ஆனால், அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மேலும், சில நாட்களில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது.
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு...
அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றுள்ளார். கடந்த தொடரில் விளையாடிய பிரக்யான் ஓஜா நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக ஜாகிர் பங்கேற்காத நிலையில் இஷாந்த், ஆர்பி சிங், ஆசிஷ் நெஹ்ரா, பிரவீண் குமார் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இரண்டு தொடர்களுக்கான இந்திய அணி:
டோணி, யுவராஜ், சச்சின், கம்பீர், டிராவிட், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், அபிஷேக் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, ஆர்.பி. சிங், இஷாந்த் சர்மா, பிரவீண் குமார், ஆசிஷ் நெஹ்ரா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications