For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜாவித் மியான்தத் இந்தியா வர விசா தடையில்லை: மத்திய அரசு

By Mayura Akilan
Javed Miandad
டெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் இந்தியா வருவதற்கு தடை விதிக்கவில்லை. அவருக்கு சாதாரண முறையிலேயே விசா வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஜனவரி 5ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டெல்லி வரப்போவதாகவும் அதற்காக விசா பெற்றுள்ளதாகவும் ஜாவித் மியான்தத் தெரிவித்திருந்தார்.

மியான்தத் வருகைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா கட்சியினரும், காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பாள் பால் உள்ளிட்டோரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமின் உறவினராகவும் உள்ள மியான்தத் இந்தியா வருவதற்கு விசா வழங்கக் கூடாது என்றும், இது இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றும புதன்கிழமையன்று தெரிவித்தனர்.

இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் மியான்தத் இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா அரசால் தீவிரமாக தேடப்படும் குற்றவாளியான தாவூர் இப்ராஹிம் மகளைத்தான் தனது மகனுக்கு மணம் முடித்துள்ளார் ஜாவித் மியான்தத் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 3, 2013, 15:20 [IST]
Other articles published on Jan 3, 2013
English summary
The government on Thursday said that former Pakistan cricket captain Javed Miandad was granted visa to India according to the regular procedure and that he was not on any prohibited list. Miandad is related to India's most wanted terrorist Dawood Ibrahim.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+