
நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில், கேப்டன் சொன்னால் அதை தேர்வாளர்கள் மறுக்க மாட்டார்கள். எனவே ஷேவாக் நீக்கத்தில் நிச்சயம் கேப்டன் டோணியின் கை இருக்கும் என்று உறுதியாக நம்புவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அதை மறுத்துப் பேசியுள்ளார் கங்குலி. அதில் தான் டோணியை குற்றம் சாட்டும் வகையில் பேசவில்லை என்று சொல்லியுள்ளார் கங்குலி.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், ஷேவாக்கின் நீக்கத்திற்கு டோணிதான் காரணம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
வழக்கமாக அணித் தேர்வில் கேப்டன்களின் கருத்து கேட்கப்படுவது வழக்கம், அதுதான் நடைமுறை. எனவேதான் நான் அப்படிப் பேசினேன். இருப்பினும் ஷேவாக் நீக்கத்தில் டோணிக்கு தொடர்பு உள்ளதா, இல்லையா என்பதைச் சொல்வது கஷ்டம்.
வழக்கமாக வீரர்கள் சேர்ப்பு, நீக்கம் குறித்து கேப்டன்களிடம் தேர்வுக்குழு கேட்கும். நான் கேப்டனாக இருந்தபோதும் சரி, டிராவிட், டெண்டுல்கர், கும்ப்ளே, அஸாருதீன் என அனைவர் கேப்டனாக இருந்தபோதும் அப்படித்தான் நடந்தது. டோணியிடமும் கூட அப்படித்தான் கேட்பது வழக்கம். எனவேதான் நான் அப்படிக் கருத்து தெரிவித்தேன். மற்றபடி நான் டோணியைக் குற்றம் சாட்டி கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும் கேப்டன் சொல்வதையெல்லாம் தேர்வுக் குழு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கேப்டன்கள் சொல்வதையெல்லாம் தேர்வுக் குழு ஏற்கும் என்றும் சொல்ல முடியாது என்றார்.