மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக் ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். நேற்று முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. ரமேஷ் பவார், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இடம் இல்லை.
ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டிருந்த ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிக்குத் திரும்பியுள்ளார்.
அணி விவரம்:
அனில் கும்ப்ளே (கேப்டன்), ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண், எம்.எஸ்.டோணி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், வாசிம் ஜாபர், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், முரளி கார்த்திக், திணேஷ் கார்த்திக்.