
கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, 'மற்றவர்கள் கூறுவது போல் நான் கிரிக்கெட் கடவுள் இல்லை; நான் தவறுகள் செய்கிறேன்; கடவுள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்; சுனில் கவாஸ்கரையும் விவியன் ரிச்சர்டையம் எனது முன்னோடிகளாக கொண்டு விளையாடி வருகிறேன்; அவர்களின் சாதனைகளை சமன் செய்யவே விரும்புகிறேன்' என இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்