டிரினாட்: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு இந்தியா இன்று பதிலடியாக இலங்கையை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள், இந்தியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளை 39 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. அதற்கு முந்தைய போட்டியில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. முந்தைய லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.