சென்னை: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற 38வது லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான ஆட்டத்தின் சில முக்கிய ஹைலைட்ஸ்கள் இவை...
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அற்புதமான ஆட்டத்தால் அந்த அணி 20ஓவர் முடிவில் 200 ரன்களை எட்டியது...
-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலேயான சொதப்பல் பந்துவீச்சு பல நேரங்களில் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது.
- சென்னை அணியின் நன்னெஸ் 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை அள்ளிக் கொடுத்தார். கொல்கத்தா அணியின் காலிஸும் கூட 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை அள்ளிக் கொடுத்தார்.

- சென்னை அணியின் மொஹித் சர்மா, பிராவோ, மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பிராவோ விக்கெட்டை வீழ்த்திய போது வழக்கமான தமது டான்ஸை மறக்கவில்லை...
- கொல்கத்தாஅணியின் நரின் மற்றும் பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசியது
- கொல்கத்தா அணி 20 பவுண்டரிகள், 5 சிக்சர்களை விளாசியது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக நேற்று விளையாடினார் மெக்கல்லம். அவர் வெறும் 6 ரன்களில் அவுட் ஆனார்.
- சென்னை அணியின் ஹசி சதம் அடிக்கும் வாய்ப்பை 5 ரன்களில் நழுவ விட்டார்... நடப்பு ஐபிஎல் தொடரில் 445 ரன்களை எட்டியிருக்கும் ஹசி தற்போதைய சீசனில் அடித்திருக்கும் 4வது அரை சதம்..
- கொல்கத்தாவின் பிஸ்லாவும் கூட சதம் அடிக்கும் வாய்ப்பை 8 ரன்களில் நழுவ விட்டார்...
- கொல்கத்தா அணி கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் எடுக்க வேண்டிய ஒரு நிலை இருந்தது. ஆனால் அந்த அணியின் பிஸ்லாவும் மோர்கனும் இந்த நெருக்கடியை ஓரளவு தணித்தனர்.
- கொல்கத்தா அணி கடைசி ஓவரில் 19 ரன்களை எடுக்க வேண்டிய நிலை இருந்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோரிஸ் நிலைமையை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் அற்புதமாக பந்து வீசி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க வழக்கம் போல கடைசி ஓவர் த்ரில் வெற்றியை ருசித்தது சென்னை அணி.