
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக இவர்கள் சிக்கியுள்ளனர். ஸ்ரீசாந்த் தவிர, அஜித் சண்டிலா மற்றும் அங்கித் சவான் ஆகியோரும் பிடிபட்டுள்ளனர். மும்பையில் வைத்து இவர்களைப் போலீஸார் கைது செய்து டெல்லி கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் 7 புக்கிகளும் சிக்கியுள்ளனர். இந்த வாரத்தில் நடந்த பல்வேறு போட்டிகளை ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக இவர்கள் மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக நடிகை ஷில்பாஷெட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.