
ஆந்திர மாநில மத்திய மண்டல காவல்துறை துணை ஆணையர் கமலசன் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, முஷீராபாத் மற்றும் சிக்கத்பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது.
போலீசார் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையி நவீன் குமார் மற்றும் அவரது 3 நண்பர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.03 லட்சம் ரொக்கம், ஒரு தொலைக்காட்சி மற்றும் 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டோரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.