For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை அணி உடனடி நீக்கம் இல்லை- டோணி நிம்மதி பெருமூச்சு!

By Mathi
Dhoni
சென்னை: ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சிறைக்குப் போனதால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸை உடனடியாக நீக்கப் போவதில்லை என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பதால் கேப்டன் டோணி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்பதற்காகவே நேற்று முதல் திட்டமிட்ட பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் சென்னை அணிக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் ஷரத்துகளை வரிக்கு வரிக்கு வெளியிட்டு சென்னை அணியை வெளியேற்றுவதற்காக போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சென்னை அணியின் கேப்டன் டோணி, சென்னை அணியை நீக்கிவிட்டால் நான் ஐபிஎல் போட்டியிலேயே விளையாட மாட்டேன் என்று அறிவித்தார். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உடனடியாக நீக்கப் போவது இல்லை என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. இதனால் டோணி நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி தனது வலுவை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 25, 2013, 14:53 [IST]
Other articles published on May 25, 2013
English summary
Mahendra Singh Dhoni, India and Chennai Super Kings (CSK) skipper, might be relieved after reports which quoted BCCI sources saying that the team would not be terminated immediately. Decision over CSK's future in Indian Premier League (IPL) as franchise would be taken after the finale which has been scheduled on Sunday, May 26.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+