
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் அந்த 3 பேரையும் இன்று காலை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 வீரர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சஸ்பெண்ட் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று மதியம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள் தவிர டெல்லியில் 7 புக்கீகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.