
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீசாந்த்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸார் செயல்படுவது போலத் தெரிகிறது. வேண்டும் என்றே அவர் குறித்த செய்திகளை மீடியாக்களுக்கு போலீஸாரே கசிய விட்டு வருகின்றனர் என்றார் அவர்.
இதற்கிடையே ரிபெக்கா மூலம் ஸ்ரீசாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நான் அப்பாவி. எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.