
மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங்
அந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின்கேப்டனாக இருந்தவர் ஹர்பஜன் சிங். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த்.

திடீர் மோதல்.. பளார் அறை
போட்டியின்போது திடீரென ஹர்பஜன் சிங்குக்கும், ஸ்ரீசாந்த்துக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீசாந்த் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார் ஹர்பஜன் சிங்.

கேவிக் கேவி அழுத ஸ்ரீசாந்த்
இதை எதிர்பாராத ஸ்ரீசாந்த் கேவிக் கேவி அழுதார். அவரை அமைதிப்படுத்த சக வீரர்கள் கடுமையாக முயன்றார். ஆனால் பச்சைப் புள்ள போல அழுத ஸ்ரீசாந்த்தைப் பார்த்து ரசிகர்கள் பரிதாப்பட்டனர்.

சமீபத்தில் மீண்டும் சர்ச்சை
இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தநிலையில் சமீபத்தில் மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்பினார் ஸ்ரீசாந்த்.

கம்பீரை வம்புக்கிழுத்த கோஹ்லி
சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும், ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கும் இடையிலான போட்டியின்போது கோஹ்லிக்கும், கம்பீருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கம்பீரை கடுமையாக விமர்சித்திருந்தார் கோஹ்லி.

முதுகில் குத்திய ஹர்பஜன்.. ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு
இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஸ்ரீசாந்த், தனக்கு 2008ம் ஆண்டுநடந்த சம்பவத்தி்ன்போது நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். தன்னை முதுகில்குத்தி விட்டார் ஹர்பஜன் சிங் என்றும் அவர் வர்ணித்திருந்தார்.

உடனே ஸ்ரீசாந்த்தை எச்சரித்த பிசிசிஐ
இதையடுத்து ஸ்ரீசாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அடித்துப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கை விட்டது. இனிமேல் இப்படிப் பேசினால் நடப்பதே வேறு என்றும் மிரட்டியது. இதனால் டிவிட் அனுப்புவதை நிறுத்தினார் ஸ்ரீசாந்த்.

பின்னணியில் யார்..?
இந்தநிலையில்தான் தற்போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்தைக் கைது செய்துள்ளனர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் நம்பிக்கை மிக்கவர் ஸ்ரீசாந்த். கொஞ்சம் சேட்டைக்காரர்தான் என்றாலும் கூட இப்படி ஸ்பாட் பிக்ஸிங் செய்யும் அளவுக்கு அவர் போவாரா என்று அத்தனை பேரும் ஆச்சரியப்படுகின்றனர்.
எனவே யாருடைய துண்டுதலிலாவது அவரை வேண்டும் என்றே மாட்டி விட்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.


Click it and Unblock the Notifications