
18வது ஓவரில் முதல் முட்டல்
பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது 18 ஓவரின்போது இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இஷாந்த் சர்மாவுக்கும், கம்ரான் அக்மலுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

கோபத்துடன் பேசிய இஷாந்த்
கோபத்துடன் பேசிய இஷாந்த் 18வது ஓவரின் 4வது பந்தில் இஷாந்த் சர்மா வீசிய பந்தை அடித்தார் கம்ரான் அக்மல். அப்போது திடீரென இஷாந்த் சர்மா, கம்ரானை நோக்கி கோபமாகப் பேசினார். பதிலுக்கு கம்ரானும் பேசினார். ஆனால் நடுவர்களும் கேப்டன் டோணியும் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினர்.

பெரிதாக வெடிக்காமல் ஓய்ந்த பிரச்சினை
நடுவர்களும், கேப்டன் டோணியும், பிற இந்திய வீரர்களும் இருவருக்கும் இடையே புகுந்து பிரச்சினையை சமாளித்ததால் பிரச்சினை பெரிதாகாமல் அப்படியே தணிந்து போனது. ஆட்டமும் தொடர்ந்தது.


Click it and Unblock the Notifications