For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“யார் பேச்சையும் கேட்க முடியாது”.. பாகிஸ்தானின் எச்சரிக்கை அறிக்கை.. மத்திய அமைச்சர் அனுராக் பதிலடி!

டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடர் குறித்து ஜெய் ஷா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவித்திருந்தார்.

ஜெய் ஷாவின் அறிவிப்பு

ஜெய் ஷாவின் அறிவிப்பு

பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பேசியிருந்த அவர், பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால், இந்திய அணி அங்கு செல்லாது என்றும், ஆசிய கோப்பை தொடரை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட பாகிஸ்தான் வாரியம் கடும் எச்சரிக்கையை விடுத்தது.

பாக்.விட்ட எச்சரிக்கை

பாக்.விட்ட எச்சரிக்கை

இதுகுறித்து அந்நாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்லாது. இதே போல ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கவுன்சிலில் இருந்து விலகிவிடுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு பதில்

மத்திய அரசு பதில்

இந்நிலையில் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார். அதில், விளையாட்டு துறையில் மிக முக்கியமான இந்தியாவில், பல உலகக்கோப்பைகள் நடந்துள்ளன. இதே போல அடுத்தாண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும். இதில் அனைத்து நாடுகளும் பங்கேற்பார்கள். பாகிஸ்தானும் இதில் கலந்துக்கொண்டே தீரும். ஏனென்றால் யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை.

பிரச்சினை வேண்டாம்

பிரச்சினை வேண்டாம்

இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மோதுவதால் தான் ஐசிசிக்கு நல்ல வருமானம் வருகிறது. இப்படிபட்ட போட்டி நடைபெறவில்லை என்றால் பெரிய இழப்பாக இருக்கும். பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்பது உள்துறை அமைச்சகத்தின் முடிவாகும். வீரர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாக வைத்திருப்போம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை பெரிய பிரச்சினையாக செய்யக்கூடாது. ஒருவேளை பாகிஸ்தான் பிரச்சினை செய்தால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தியா - பாகிஸ்தான் மோதல் இருக்காது என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 20, 2022, 16:28 [IST]
Other articles published on Oct 20, 2022
English summary
Sports minister Anurag thakur gives a reply to Pakistan Cricket Board after the Asia cup 2023 controversy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+