கவலையே படாதீங்க.. கப்பு மறுபடியும் நமக்குத்தான்.. டோணி நம்பி்ககை
டெல்லி: 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி கோப்பையை தக்க வைக்கும் என்று கேப்டன் டோணி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு கடந்த உலகக் கோப்பைப் போட்டியில், பெருமைத் தேடித் தந்தது டோணியின் அட்டகாசமான கேப்டன்ஷிப்பும் ஆட்டமும் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் 2015 உலகக் கோப்பைப் போட்டித் தொடரையும் இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டோணி.

போட்டியை சந்திக்கத் தயார்
நான் உலகக் கோப்பைப் போட்டித் தொடரை சந்திக்க ஆவலாகவும், ஆர்வமாகவும் உள்ளேன்.

சிறப்பாக ஆடுவோம்
இந்தப் போட்டித் தொடரில் இந்தியா சிறப்பாக ஆடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பெருத்த நம்பிக்கையில்
சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரை இந்தியா வென்ற விதம், அனைவருக்கும் தெரியும். வீரர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர்.

2015 கோப்பையும் நமக்கே
இந்த நம்பிக்கையும், கிடைத்துள்ள அனுபவங்களும் 2015 தொடரையும் வெல்ல நமக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷலானது
உலகக் கோப்பைப் போட்டியானது ஒவ்வொரு வீரருக்கும் பெருமிதம் தரும் விஷயம். ஸ்பெஷல் உணர்வைத் தரும் விஷயம். 2011ல் வெற்றியைச் சுவைத்த நாம், 2015 தொடரிலும் வெற்றியைக் காண ஆர்வமாக உள்ளோம். நிச்சயம் அது நடக்கும் என்றார்.
நீ இருக்கிறப்ப எங்களுக்கு எதுக்குக் கவலை... தல!


Click it and Unblock the Notifications