கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் ஜிம்பாப்வேவுக்கு கிளம்பும் முன்பு ஆபாச நடனம் பார்த்து சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய மேனேஜராக மொயின் கான் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே கிளம்பும் முன்பு அவர் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் ஜுனைத் கான், அன்வர் அலி மற்றும் அலி ஆசாத் ஆகியோர் லாகூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆபாச நடனம் பார்த்தது ஜியோ நியூஸ் சேனல் கேமராவில் பதிவாகியுள்ளது. தியேட்டர்களில் நடக்கும் இந்த ஷோக்களில் நடிகைகள் மேடையில் கவர்ச்சியாக ஆடுவார்கள்.
நேற்று இரவு பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே கிளம்பும் முன்பு தான் அவர்கள் இந்த ஆபாச நடனத்தை பார்த்து சிக்கியுள்ளனர்.
நடனம் ஆடிய ஒரு பெண் கூறுகையில்,
ஜுனைத் நடனத்தை பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சி. அவர் தான் எங்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த வீரர் என்றார்.