For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி- ஹஸ்சி, பிராவோ சாதனை

By Mathi
Raina, Bravo ensure seventh successive win for CSK
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 6வது தொடரின் 45வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 7வது பெற்றியைப் பெற்றது. நேற்றைய போட்டியில் சென்னை அணியின் மைக் ஹஸ்சி ஐபிஎல் தொடரில் 482 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்து ஆரஞ்சு நிற தொப்பியைக் கைப்பற்றினார். பின்னர் இரவு நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கெய்ல் இந்த சாதனையை முறியடித்து அவர் 505 ரன்களை எட்டி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்..சுரேஷ் ரெய்னாவின் அபார சதமும் சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இதேபோல் சென்னை. சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ நடப்பு ஐபிஎல் போட்டிகளில் 19 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். அவர் பர்பிள் தொப்பியைக் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வினய்குமார். அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 9- ஆட்டத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. 2வது இடத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் இருக்கிறது.

Story first published: Friday, May 3, 2013, 18:01 [IST]
Other articles published on May 3, 2013
English summary
Suresh Raina and Dwayne Bravo with their performances guided Chennai Super Kings to a 15-run victory over Kings XI Punjab to stay on top
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X