
ரவி சாஸ்திரி தவிர கிரிக்கெட் வாரிய பொருளாளர் அஜய் ஷிர்கேவுக்கும் இடம் கொடுத்துள்ளனர். மேலும் ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் இடம் பெறவுள்ளார்.
குருநாத் மெய்யப்பனுக்கும், ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இந்த குழு விசாரிக்கும்.
முன்னதாக இந்தக் குழுவில் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா, சஞ்சய் ஜெகதாலே ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இருப்பினும் பின்னர் இவர்களது பெயர்கள் கைவிடப்பட்டு சாஸ்திரி, ஷிர்கே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.