மும்பை: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சதமடித்தார். இது முதல்நிலை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் அடித்திருக்கும் 81-வது சதமாகும்.
இந்தியாவின் சுனில் கவாஸ்கர் இதற்கு முன்பு 81- சதமடித்திருந்தார். கவாஸ்கரின் இந்த சாசதனையை சச்சின் டெண்டுல்கர் இன்று சமன் செய்திருக்கிறார். மொத்தம் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களும் இந்த சதத்தில் அடக்கம்.
மேலும் இந்த சதம் மூலமாக சச்சின் 25,000 ரன்களை எட்டியும் இருக்கிறார். மொத்தம் 303 போட்டிகளில் விளையாடி 25 ஆயிரம் ரன்களை அவர் எடுத்திருக்கிறார்.
முன்னதாக ரஞ்சி கோப்பை போட்டியின் காலிறுதியின் போது சச்சின் தமது 80-வது சதத்தை எட்டியிருந்தார்.