
அப்படியே மைனர் போல
மைனர்கள் கையில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு சுற்றுவார்களே அதேபோல நேற்று தனது கையில் மல்லிகைப் பூவை வாங்கி சுற்றி விட்டிருந்தார் சாக்ஷி.

அடிக்கடி நுக்ர்ந்தபடி
மேலும் அந்த மல்லிகைப் பூவை அடிக்கடி நுகர்ந்து பார்த்து அதன் வாசத்தை அனுபவித்தார். மல்லிகைக்கு மயங்காத மனங்கள் உண்டோ....

பூவை ரசித்த பாவை
அதேபோல மல்லிகைப் பூவை அடிக்கடி தனது விரல்களால் தடவிப் பார்த்தபடியும், தனது முகத்தில் வைத்து செல்லமாக உரசியபடியும் மல்லிகையின் சுகந்தத்தை அனுபவித்தார் சாக்ஷி.

மச்சான் ஆசையை...!
மல்லிகையை கையில் வைத்திருந்ததாலோ என்னவோ, டோணி பேட் செய்யும்போதெல்லாம் உற்சாகமாக ஊக்ககப்படுத்தியபடி இருந்தார் சாக்ஷி.

தாடையில் பந்து பட்டபோது துடித்தார்
ஒருமுறை மொஹித் சர்மா வீசிய பந்தைப் பிடிக்க முயன்ற டோணிக்கு பந்து தாடையில் பட்டு விழுந்தது. இதனால் லேசான வலியால் துடித்தார் டோணி... ஆனால் அதை விட வேகமாக துடித்தார் சாக்ஷி.
கூடிய சீக்கிரமே சாக்ஷிக்கு தமிழ்நாட்டு கிரிக்கெட் மக்கள் சங்கம் வைத்து கோவில் கட்டினாலும் கட்டலாம்....!


Click it and Unblock the Notifications











