For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் பொறுப்பிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க டோணி, சொல்கிறார் கவாஸ்கர்

Gavaskar
சென்னை: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டி டிசம்பர் 30ம் தேதி சென்னையில் நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறிது காலத்திற்கு டோணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் 2015 உலகக் கோப்பைப் போட்டிக்கு அவரும், அணியும் முழுமையாக தயாராக முடியும். மேலும் தனது பேட்டிங் திறமையையும் அவர் அதிகரித்துக் கொள்ள முடியும்.

உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. எனவே இப்போது டோணி கேப்டன் பொறுப்பிலிருந்து சிறிது காலத்திற்கு விலகியிருந்தால் பெரிய அளவில் அவருக்குப் பாதகம் ஏற்பட்டு விடாது. அவருக்கு அது கூடுதல் பலன்களையேத் தரும்.

இப்போது என்றால் உடனே கூட தேவையில்லை. ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின்னரோ அல்லது 2013 பிற்பாதியிலோ அவர் ஓய்வைப் பற்றி சிந்திக்கலாம்.

அதேசமயம், இந்த பிரேக்கானது டோணியே விரும்பி எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.

டோணி விலகியிருக்கும் காலத்தில் விராத் கோஹ்லியை கேப்டனாக்கலாம். இதன் மூலம் அணியிலும் இளம் ரத்தம் பாய்ச்சியது போல இருக்கும். அவரிடம் மன்சூர் அலிகான் பட்டோடியைப் போன்ற திறமை உள்ளது. அது அணிக்கு பலன் தரும். மேலும் எதிர்காலத்தில் நிரந்தர கேப்டனாகும் வாய்ப்பு இருப்பதாக அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என்றார் கவாஸ்கர்.

நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது...

Story first published: Friday, December 28, 2012, 15:07 [IST]
Other articles published on Dec 28, 2012
English summary
Heavy security has been planned to Chennai Indo -Pak ODI on Dec 30.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+