
சுரேஷ் ரெய்னா மீது சந்தேகம்
சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 10 உ.பி. வீரர்கள் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகம் வந்துள்ளது.

பல கும்பல்கள் சிக்கியுள்ளன
வாரணாசி, மீரட், கான்பூர், காஜியாபாத் போன்ற இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்களை கண்டுபிடித்துள்ளோம். தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தீவிர விசாரணை
இந்த மோசடியில் பலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் தனியாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ரெய்னா- சாவ்லா - பிரவீன் குமார் - ஆர்.பி.சிங்
உ.பி.யைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, இம்தியாஸ் அகமது, அங்கித் சிங் ராஜ்புத், புவனேஷ் குமார், அலி முர்தாசா, எகலாவ்யா திவிவேதி, ருத்ர பிரதாப் சிங், பிரவீன் குமார், பியுஷ் சாவ்லா ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். இப்போதைக்கு எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது.

விரைவில் கைது
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரை வில் கைது செய்யப்படுவர். தேவைப்பட்டால் டெல்லி, மும்பை போலீசாருடன் இணைந்து செயல்படுவோம். முன்னாள் முன்னனி வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலரை கண்காணித்து வருகிறோம் என்றார் அவர்.
அருண்குமாரின் இந்த அதிரடித் தகவல் கிரிக்கெட் உலகில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











