டெல்லி: இந்திய அணியில் எப்படியும் மீண்டும் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனிடம் பயிற்சி பெற இருக்கிறார்.
அண்மையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் இடம்பெறுவதற்காக 3 வார பயிற்சியை கேரி கிறிஸ்டனிடம் பெறுவதற்காக கடந்த 6-ந் தேதியே கேப் டவுண் செல்ல திட்டமிட்டிருந்தார் ஜாஹிர் கான். ஆனால் விசா நடைமுறை சிக்கல்களால் அவர் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்த வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் தென்னாப்பிரிக்கா செல்லும் ஜாஹிர் கான், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் முதன்மை கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
அண்மையில்தான் பிரான்ஸில் 6 மாத கால பயிற்சியை முடித்துக் கொண்டு ஜாஹிர் கான் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.