Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்திய வீரர்களுக்கு சுழல் வலை விரித்தால் நமக்கே ஆபத்து".. இந்தியாவை சமாளிக்க இலங்கை அணி வியூகம்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த தீவிர சுழற்பந்து ஆடுகளத்திற்கு பதிலாக, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிற்கும் சம வாய்ப்பு அளிக்கும் சீரான ஆடுகளத்தை அமைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

காலே சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 23 அன்று கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய பேட்ஸ்மேன்களை சுழற்பந்து வீச்சில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும், சுழற்பந்து ஆடுகளத்தை அமைத்தால் அது இலங்கை அணிக்கே பின்னடைவாக முடிந்துவிடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Sri Lanka Chose Balanced Pitch Against India in 2nd Test at SSC Colombo Fearing Turning Pitch Could Backfire

தினேஷ் சண்டிமால், குசல் மெண்டிஸ், பதும் நிசாங்கா போன்ற அனுபவ வீரர்கள் காயம் காரணமாக அணியில் இல்லாததால், தங்களது இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் காலே மைதானத்தைப் போன்றே ஒரு சமநிலையான ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு எஸ்எஸ்சி மைதானம் ஒரு காலத்தில் இலங்கை அணியின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்தது. கடந்த 1999 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் இங்கு விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 6ல் வெற்றியும், 6ல் டிராவும் பெற்றது. சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர் ரன் குவிக்க, முத்தையா முரளிதரன் விக்கெட்களை அள்ளினார். ஆனால், இந்த ஜாம்பவான்களின் ஓய்வுக்குப் பிறகு இங்கு நடந்த 7 டெஸ்ட்களில் 3ல் மட்டுமே இலங்கை வென்றது, 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. குறிப்பாக இந்தியாவிடம் 2 முறை இங்கு படுதோல்வி அடைந்துள்ளது.

மிடில் ஆர்டரில் ஆடிக் கொண்டிருந்த சேவாக்கை தொடக்க வீரராக மாற்றியது கங்குலி இல்லை.. இந்த பவுலர்!

மிடில் ஆர்டரில் ஆடிக் கொண்டிருந்த சேவாக்கை தொடக்க வீரராக மாற்றியது கங்குலி இல்லை.. இந்த பவுலர்!

இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை அள்ள இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் தொடரை 1-1 என சமன் செய்ய இலங்கை அணியும் தீவிர வியூகம் வகுத்து வருகிறது.

Story first published: Friday, August 21, 2026, 13:40 [IST]
Other articles published on Aug 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+