
சண்டிமால் போட்டோ
தனது வீட்டுக்கு இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் வந்திருந்ததாகவும், அவர்தான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வெல்ல மந்திரம் போட்டு பூஜை செய்யும்படியும் கேட்டுக்கொண்டதாகவும், கங்கா கூறியுள்ளார். அதிர்ச்சியளிக்கும்விதமாக, சண்டிமால் தனது வீட்டில் இருந்தபோது எடுத்த போட்டைவையும் அவர் பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.

அமைச்சருக்கு நன்றியாம்
அந்த போஸ்டில் அவர் வெளியிட்ட அடுத்த கருத்துதான் இதில் ஸ்பெஷல். எனது நன்றியை அமைச்சர் தயாசிரி ஜெயசேகராவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் சண்டிமாலை என்னை பார்க்க அனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தை நான் உருவாக்குவேன். இவ்வாறு கங்கா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

வழக்கு எச்சரிக்கை
இதுகுறித்து அறிந்ததும், அமைச்சர் ஜெயசேகரா கடும் கோபமடைந்துள்ளார். தன்னை பற்றிய அவதூறு போஸ்டுக்காக, கங்காவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று ஜெயசேகரா எச்சரித்தார். அமைச்சர் எச்சரிக்கையை தொடர்ந்து, அந்த போஸ்டை கங்கா டெலிட் செய்துள்ளார்.

தோற்றது ஏன்?
இதுகுறித்து ஜெயசேகரா கூறுகையில், உண்மையிலேயே கங்கா செய்வினை வைத்துதான், இலங்கை வெற்றி பெற்றது என்றால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் இலங்கை படுதோல்வியை சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எது எப்படியோ, இனிமேல் இந்திய அணி வீரர்கள் இலங்கை செல்லும்போது உஷாராக இருக்க வேண்டும். காலடி மண், தலை முடி போன்றவற்றை யாராவது எடுத்துச் சென்று பில்லி, சூனியம் வைத்துவிடுவார்கள் போல இருக்குதே.


Click it and Unblock the Notifications