For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு டூர் போகும்போது டோணியும், கோஹ்லியும் உஷாரா இருக்கனும்.. பில்லி, சூனியம் தாக்க கூடும்

இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் தனது வீட்டுக்கு வந்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வெல்ல மந்திரம் போட்டு பூஜை செய்யும்படியும் கேட்டுக்கொண்டதாக, சூனியக்காரி கூறியுள்ளார்.

By Veera Kumar

கொழும்பு: இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் செய்வினை செய்துதான் வெற்றி பெற்றதாக வெளியான தகவலால் கிரிக்கெட் அரங்கில் புயல் வீசுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு பிறகு, இலங்கையை சேர்ந்த பிரபல பெண் மந்திரவாதி கங்கா சொய்சா தனது பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு போஸ்ட்தான் இந்த புயலுக்கு காரணம்.

கங்கா சொய்சா தனது பேஸ்புக் பக்கத்தில் இலங்கை அணி வெற்றிக்கு, தான் பில்லி, சூனியம் செய்ததுதான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

சண்டிமால் போட்டோ

சண்டிமால் போட்டோ

தனது வீட்டுக்கு இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் வந்திருந்ததாகவும், அவர்தான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வெல்ல மந்திரம் போட்டு பூஜை செய்யும்படியும் கேட்டுக்கொண்டதாகவும், கங்கா கூறியுள்ளார். அதிர்ச்சியளிக்கும்விதமாக, சண்டிமால் தனது வீட்டில் இருந்தபோது எடுத்த போட்டைவையும் அவர் பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.

அமைச்சருக்கு நன்றியாம்

அமைச்சருக்கு நன்றியாம்

அந்த போஸ்டில் அவர் வெளியிட்ட அடுத்த கருத்துதான் இதில் ஸ்பெஷல். எனது நன்றியை அமைச்சர் தயாசிரி ஜெயசேகராவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் சண்டிமாலை என்னை பார்க்க அனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தை நான் உருவாக்குவேன். இவ்வாறு கங்கா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

வழக்கு எச்சரிக்கை

வழக்கு எச்சரிக்கை

இதுகுறித்து அறிந்ததும், அமைச்சர் ஜெயசேகரா கடும் கோபமடைந்துள்ளார். தன்னை பற்றிய அவதூறு போஸ்டுக்காக, கங்காவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று ஜெயசேகரா எச்சரித்தார். அமைச்சர் எச்சரிக்கையை தொடர்ந்து, அந்த போஸ்டை கங்கா டெலிட் செய்துள்ளார்.

தோற்றது ஏன்?

தோற்றது ஏன்?

இதுகுறித்து ஜெயசேகரா கூறுகையில், உண்மையிலேயே கங்கா செய்வினை வைத்துதான், இலங்கை வெற்றி பெற்றது என்றால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் இலங்கை படுதோல்வியை சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எது எப்படியோ, இனிமேல் இந்திய அணி வீரர்கள் இலங்கை செல்லும்போது உஷாராக இருக்க வேண்டும். காலடி மண், தலை முடி போன்றவற்றை யாராவது எடுத்துச் சென்று பில்லி, சூனியம் வைத்துவிடுவார்கள் போல இருக்குதே.

Story first published: Thursday, October 26, 2017, 15:08 [IST]
Other articles published on Oct 26, 2017
English summary
Dayasiri Jayasekara, Sri Lanka's Sports Minister, on Wednesday denied ordering Srilanka team to use witchcraft to score a shock two-match Test series win against Pakistan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+