லண்டன்: இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை இலங்கை விளையாடியது. இலங்கை அணி 453 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 122 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடியது. அந்த அணி 8 விக்கெடுகளை இழந்து 267 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்ஸை கடைசி நாளான நேற்று இலங்கை அணி எதிர்கொண்டது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது இலங்கை.
இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.