கொழும்பு: ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான இந்த அணியில் காயத்தால் அவதிப்பட்ட சீனியர் வீரர்களுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வரும் 24ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பை டி20 மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. இவ்விரு போட்டித்தொடர்களுக்குமான வீரர்களை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இலங்கை தற்போது அணி வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ளது.
லசித் மலிங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், திலகரத்னே தில்ஷன், நிரோசன் டிக்வெல்லா, ஷீகன் ஜெயசூர்யா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா, தசுன் சனகா, சமரா கப்புகெதரா, நுவான் குலசேகரா, துஷ்மந்தா சமீரா, திசாரா பெரேரா, சசித்ரா சேனநாயகே, ரங்கனா ஹீரத், ஜெப்ரே வன்டர்சே.