கொழும்பு: வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குலசேகர கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் ரன்முதுகல என்ற இடம் அருகே நுவான் குலசேகரவின் கார், பைக் ஒன்றின் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குலசேகரவை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர் ரூ1 லட்சம் மதிப்பிலான ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்க்கப்பட்டுள்ளது.