கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் இழந்த தென் ஆப்பிரிக்கா, தம்புலாவில் இன்று முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இலங்கை. அந்த அணி கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100வது போட்டியாகும். ஆனால், ரபடாவின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி, 193 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
குசால் பெரேரா அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 19 ஓவர்கள் எஞ்சிய நிலையிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி இலக்கை எட்டி பிடித்து. 32 பந்துகளில் 53 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக நின்றார் டுமினி.