
நிறுத்தப்பட்ட தொடர்
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து -தென்னாப்பிரிக்கா தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

சில வீரர்களுக்கு பாசிட்டிவ்
இதற்கென முன்னதாக தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் சில வீரர்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் பயோ செக்யூர் சூழலில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

டெஸ்ட் தொடர் 26ம் தேதி துவக்கம்
இந்நிலையில் அணியில் முன்னாள் தென்னாப்பிரிக்க அன்டர் 19 அணியின் கேப்டன் ரேனாட் வான் டோன்ட, லூத்தோ சிபாம்லா மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

அனைவருக்கும் நெகட்டிவ்
இந்நிலையில் நேற்றைய தினம் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து அணி வீரர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











