
செயின்ட் லூசியா: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியின் இரண்டாவது நாள் மாலையில் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக கூறி, போட்டியின் நடுவர்கள் மூன்றாம் நாள் காலையில் பந்தை மாற்றினர்.
