கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு வாரியத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் அண்மையில் வீரர்களுக்கு 7% ஊதிய உயர்வை அறிவித்தது. ஆனால் உலகக் கோப்பை போன்ற போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 20% தர வேண்டும் என்பது இலங்கை வீரர்களின் கோரிக்கை.

இதை நிராகரித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், வாரியத்தின் 58% வருமானமே வீரர்களின் ஊதியத்துக்காக மட்டும் செலவிடப்படுகிறது. அதைவிட 7% ஊதிய உயர்வையும் இந்த ஆண்டு அறிவித்துள்ளோம். இந்த நிலையில் இப்படி வீரர்கள் கோரிக்கை வைப்பது நியாயமல்ல என்கிறது.
இலங்கை என்றாலே அக்கப்'போர்' தானோ!