அபுதாபி : சிஎஸ்கே அணியில் என்னதான் நடக்கிறது என்றும் பிராவோ எல்லாம் எங்கே சென்றார்கள் என்றும் முன்னாள் வீரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஎஸ்கேவின் நேற்றைய ஆட்டத்தை நம்ப முடியவில்லை என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கேகேஆர் மற்றும் சிஎஸ்கே இடையிலான ஐபிஎல்லின் 21வது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லின் 21வது போட்டி நேற்று சிஎஸ்கே மற்றும் கேகேஆர் இடையில் அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், கேகேஆர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கேவின் பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் ஸ்கோரை 167க்கு குறைத்த நிலையில், பேட்ஸ்மேன்கள் சொதப்பி போட்டியை கைவிட்டனர்.

இந்நிலையில் சிஎஸ்கேவில் என்ன தான் நடக்கிறது என்றும் நேற்றைய ஆட்டத்தை நம்பமுடியவில்லை என்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கிறிஸ் ஸ்ரீகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அணியின் பிராவோ உள்ளிட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கேகேஆரின் பௌலிங் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.