உண்மையை சொல்வேன்...
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியுடன் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே தில்ஷான் விடைபெறுகிறார். அந்த தருணத்தில் தாம் பல்வேறு உண்மைகளைப் பேசுவேன் என கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒத்துழைப்பு தரவில்லை
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது, கேப்டன் பதவி மிகவும் கடினமாக இருந்தது. சீனியர் வீரர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சங்கக்காரா, மேத்யூஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் உண்மைகள் சொல்லுவேன்
தற்போது ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது மேலும் பல உண்மைகளைக் கூறுவேன் என தில்ஷான் தெரிவித்திருக்கிறார். அனேகமாக சனத் ஜெயசூர்யா மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் என கூறப்படுகிறது.
ஜெயசூர்யா எஸ்கேப்
இதனால் தில்ஷான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வெளிநாடு ஒன்றுக்கு ரகசியமாக தப்பி செல்லலாம் என்ற முடிவுடன் சனத் ஜெயசூர்யா இருக்கிறாராம்.. இலங்கையில் இந்த பஞ்சாயத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.