மும்பை : இலங்கை அரசின் தலையீடு இருப்பதாக கூறி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது. ஐசிசி உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான செயல்பாட்டை பெற்றது.
மேலும் அதற்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை தொடரிலும் இலங்கை பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அரசு கலைத்த நிலையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது எனக்கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தடை விதித்திருந்தது.
