
புதிய காலரியால் பிரச்னை
2004ல் சுனாமி தாக்கியதில் இந்த மைதானம் சேதமடைந்தது. அதன்பிறகு புதிய காலரி உள்ளிட்டவை கட்டப்பட்டன. இந்த மைதானத்துக்கு அருகில், போர்ச்சுகீசியர்களால், 1505ல் கட்டப்பட்ட கோட்டை உள்ளிட்டவை உள்ளன.

பாரம்பரிய சின்னம்
தற்போது புதிய காலரி கட்டப்பட்டதால், அந்தக் கோட்டை மறைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டடங்களில் ஒன்றாக இந்தக் கோட்டை உள்ளது. பெவிலியன்களை அகற்றாவிட்டால், பாரம்பரிய கட்டட அந்தஸ்து விலக்கி கொள்ளப்படும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

நவம்பரில் கடைசி போட்டி
அதனால், வரும் நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிக்குப் பிறகு, காலே மைதானத்தில் போட்டிகளை நடத்துவதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கோட்டையை மறைக்கும் காலரிகளை இடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் சோகம்
அரசின் முடிவுக்கு இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தாங்கள் விளையாடிய, நாட்டுக்கு பெருமையை தேடித் தந்த காலே மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.


Click it and Unblock the Notifications