
ஸ்விங் ஆன பந்துகள்
பிட்சில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் பந்து அதிக அளவுக்கு ஸ்விங் ஆனதுதான் பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியாததற்கு காரணம். ஆனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி வருகிறது.

சிறப்பான தொடக்கம்
3வது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 45.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது ஓரளவுக்கு நல்ல ரன் ரேட்தான். லகிரு திருமனே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா அரை சதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். தினேஷ் சண்டிமால் மற்றும் டிக்வெல்லா முறையே 13 மற்றும் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

பிட்ச் மாறிவிட்டது
இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும்போது இருந்த பிட்ச் நிலை இப்போது மாறிவிட்டது. பேட்டிங்கிற்கு வசதியாக பிட்ச் உள்ளதால் இலங்கை அதை பயனப்டுத்தி வருகிறது.

சவால்
இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை அணி எளிதாக 300 ரன்களை கடந்துவிடும். கொல்கத்தா பிட்சில் கடைசி இன்னிங்ஸ் ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே நாளை மதியத்திற்குள் தங்கள் இன்னிங்சை முடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு இலங்கை வேகமாக ரன் குவித்து வருகிறது. எனவே இந்திய அணிக்கு 2வது இன்னிங்சில் சவால் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications