98 ரன்கள் குவிப்பு
விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக ஆடி, அணியின் மானம் காத்தார். அவர் எடுத்த 98 ரன்கள் பெரும் உதவியாக இருந்தது. ரஹிம் 8 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 3வது வங்கதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இலங்கை வென்றது
ஹாசன் 43 ரன் சேர்த்தார். இலங்கை தரப்பில் பிரதீப், உடானா, தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தொடரை கைப்பற்றியது
தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 75 பந்துகளில் 82 ரன்களும், மேத்யூஸ் 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, இலங்கை அணி 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
44 மாத வெற்றி
இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட் அணிக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. சொந்த மண்ணில், இலங்கை 44 மாதங்களுக்கு( 3 ஆண்டுகள், 8 மாதங்கள்) பிறகு வென்ற முதல் தொடர் இதுவாகும். ஸ்டார் வீரர் அவிஷ்கா பெர்ணான்டோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.