சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் சீனிவாசன்!
துபாய்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதியாக துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் என். சீனிவாசன் கலந்து கொண்டார்.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை உச்சநீதிமன்றம் நீக்கியது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொள்ள தடை விதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து துபாயில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதியாக சீனிவாசன் கலந்து கொண்டார். அண்மையில்தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கைகளில் இருந்து சீனிவாசன் ஒதுங்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, April 9, 2014, 14:59 [IST]
Other articles published on Apr 9, 2014


Click it and Unblock the Notifications