டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் முறைகேடுகள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக தாம் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முன்னாள் தலைவர் சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
6வது ஐ.பி.எல். பிக்ஸிங்கில் நிகழ்ந்த முறைகேடுகளைத் தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். போட்டிகளின் போது அவரை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சீனிவாசன் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில். ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது.
என்ன காரணத்துக்காக நான் பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய பதவிக்காலம் முடியும் வரை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.